Sunday, August 31, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III

பாரிஸ் - லக்ஸம்பெர்க் பூங்கா

ஏஞ்சலின் : நான் மட்டும் உண்மையை சொல்லியிருந்தால் என்னையும் பலியிட்டு நீங்களும் அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு பலியாகியிருப்பீர்கள்.

அருண் : மூளையிருப்பவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தம் குரு அரிஸ்டாட்டிலின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு இந்திய துறவியை உடன் வருமாறு பணித்தார் அலெக்ஸாண்டர். "மகன்களை மன்னர்கள் வற்புறுத்த முடியாது," என்று உடன் செல்ல மறுத்தார் சன்யாசி.

"என்னோடு கிரேக்கத்துக்கு வர மறுத்தால் அடுத்த வினாடி உன் தலை ஜீலம் நதியில் மிதக்கும்...ம்...புறப்படு" என்று வாளை உறுவினான் அலெக்ஸாண்டர்.'

அலெக்ஸ்ஸாண்டரின் கோபாக்கினி துறவியிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. 'மகா அலெக்ஸாண்டருக்கு இந்த துறவி உத்தர விடுகிறேன், ம்... ...வெட்டி எறி என் தலையை' என்றார் துறவி ஆவேசமாக.'

ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க அதிர்ச்சியில் கல்லானான் அலெக்ஸ்ஸாண்டர்! மகுடம் சூட்டிய மாமன்னர்களே எதிரில் நிற்க திராணியற்று ஓடி ஒளியும் போது, கேவலம் உடுத்த முழம் துணி இல்லாத இந்த சன்யாசி, அலெக்ஸாண்டருக்கு உத்தரவிடுவதா? அவன் உள்ளம் கூனிகுறுகிப் போனது. உடை வாள் உறைக்குள் போனது.

No comments: