Sunday, August 10, 2008

"இங்கேயும் ஒரு சொர்க்கம்"

பாரதி கண்ட கனவாம் "சிங்களத் தீவினுக்கோர் பாலம்" நனவாக
ஒரே வாரம் !

காஷ்மீர் - கன்னியாகுமரி அல்ட்ரா மாடர்ன் நெடுஞ்சாலை போட

ஒரே மாதம் !

கங்கா - காவேரி அதி நவீன இணைப்புக் கால்வாய் அமைக்க
ஒரே ஒரு வருடம் !

அடுத்த வருடம் பாருங்களேன் விண்ணிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நம் பூமியில் சீன நெடுஞ்சுவர் மட்டுமல்ல, கங்கா - காவேரி இணைப்புக் கால்வாயும் தெரியும் !

- என வெற்றி முழக்கமிட்ட விஞ்ஞானியை...
செந்தீயின் கோர நாக்குகள் விழுங்க முயல...

அவர் கதியை அறிய இந்திய நாடு மட்டுமல்ல
உலகமே பதற்றத்தில் துடித்தது.

விடை தேடும் ஒரு பயணமாக "இங்கேயும் ஒரு சொர்க்கம்"
நாவலைக் கையில் எடுப்போம்...

புத்தம் புதிய விஞ்ஞானக் கருத்துக்களை நாடி நாமும் ஒரு விமானியாக,
பிரான்சில் - பாரிஸ், மார்சைல்ஸ், லியான், கார்சிகா தீவு,
இந்தியாவில் - தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு,
என விமானத்தில் வலம் வருவோம் !

விரைவில் இந்நாவல் வாசகர்களின் கையில் !

பறக்கத் தயாராவோம் !

வெளியீடு :

பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973

No comments: