Thursday, January 14, 2010

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 1

14-01-2010

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!

இனி சந்திரனுக்குப் போகலாம் வாங்க...

நிலவில் மனிதன்

18ம் நூற்றாண்டின் இறுதி வரை 100 கோடியாயிருந்த உலக மக்கள் தொகை 1920ல் இருநூறு கோடியை எட்டியது. 1960ல் மூன்று கோடியாக உயர்ந்த மக்கள் தொகையோ இன்று 679,58,00,000!

கி.மு 334ல் மகா அலெக்சாண்டர் தான் முதன் முதலில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி படையெடுத்து வந்த பேரரசராவார். இதன் மூலம் அவர் ஐரோப்பிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மேற்கு கிழக்கு மக்கள் இணைய ஒரு பாலமாகத் திகழ்ந்தார். அவர் வழியைப் பின்பற்றி மார்கபோலோ என்ற இத்தாலிய யாத்ரீகர் கி.பி 13ம் நூற்றாண்டில் தரை மார்க்கமாக சீனா வரை சென்று, அங்கு குப்ளாய்கான் அரண்மனையில் பலகாலம் தங்கி கீழ்திசை நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு தாய்லாந்து, இந்தியா, இலங்கை, பாரசீகம் வழியே கடல் மார்க்கமாக தாகம் திரும்பி அவரது அனுபவங்களை Description of the worldஎன்ற பயணநூலாக எழுதினார். இந்நூல் பிற்காலத்தில் ஐரோப்பிய கடலோடிகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து ஜல்லடை போட்டுத் தேடி அலைகடலுக்கப்பால் இருந்த சின்னஞ்சிறு தீவுகளைக் கூட கண்டறிந்து மனித இனம் குடியேற வழி வகுத்தார்கள்.

பார்தலோமியாடையஸ் ஆப்பிரிக்காவின் மேற்குக்கரை ஓரமாகப் பயணித்து அக்கண்டத்தின் தென்கோடியில் உள்ள நனம்பிக்கை முனையை அடைந்தார். வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புஸ்ஸி போன்றவர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிய, மெலன் முதன் முதலில் கடல் மார்க்கமாக உலகை வலம் வந்தார். ஜேம்ஸ் குக், டஸ்மென் போன்றோர் ஆஸ்திரேலியா கண்டத்தை உலகம் அறியச் செய்தனர். இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்காவின் உட்புறத்தை ஆராய்ந்த டேவிட் லிவிங்ஸ்டன், சர் ஹென்றி மார்டன் ஸ்டேன்லி போன்றோரும் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

மக்கள் தொகையில் இன்று 700 கோடியை நெருங்கும் நாம், ஏறக் குறைய பூமியின் முக்கால் பங்கு வளத்தை உறிஞ்சி விட்டோம். இனி இருக்கும் வளத்தைக் கொண்டு மனித இனம் இந்த நூற்றாண்டின் பாதியைக் கடக்க முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறிதான். மிருகங்களை விடக் கேவலமாக வாழ்வாதாரத்திற்காக இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால் அனைவர் மனதிலும் இக் கேள்வி எழுவதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதற்கான ஒரு பரிகாரம் தேடித்தான் மனிதன் விண்வெளி ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறான்.

14, 15ஆம் நூற்றாண்டுகளில் மனிதனின் தேடுதல் வேட்டையில் சிக்கி புது உலகம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா கண்டம், இன்று மக்கள் தொகையால் நிரம்பி வழிகிறது. அது போலவே ஆஸ்திரேலியா கண்டதித்திலும் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு இனி பூமியில் இடம் போதாது என்ற நிலையில்தான் அவன் தேடுதல் வேட்டை விண்வெளியின் பக்கம் திரும்பியுள்ளது. பூமியைப் போல் மனித இனம் வாழத்தகுந்த கிரகம் அல்லது துணைக் கிரகம் ஏதாவது அவன் தேடுதலில் அகப்படுமா? ங்கு மனிதன் குடியேறி வாழ முடியுமா? என்பது தான் அவன் இன்றைய தேடுதலின் இறுதி இலக்கு.

1865ல் பிரஞ்சு எழுதிதாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய சந்திர ரயில் (moon train), என்ற அவரது நாவலில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் தொடர் வண்டிபோல் சென்று வரும் கார்களைப் பற்றிய கதையை அவர் கற்பனையாகத்தான் எழுதினார். ஆனால் அவரது கற்பனைகள் கூட இன்று செயல் வடிவம் பெற்று சாத்தியமாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மனிதனது விண்வெளி யுகம் ஆரம்பமான நாள் 1957, அக்டோபர் திங்கள் 14 எனலாம். அன்றுதான் ரஷ்யா ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திர ரயிலுக்கு அடிகோலிய ரஷ் விண்வெளி வீரர் யூரிகாகரின், விண்கலம் வோல்ஸ்டாக், முதன் முதலாக ஏப்ரல் 12, 1961ல் பூமியைச் சுற்றிவர, காகரின் விண்கலத்திலிருந்து வெளி வந்து விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தார். இச்சாதனையைத் தொடர்ந்து அடுத்து வந் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான விண்வெளிப் போட்டி, ஜூலை 20, 1969ல் சந்திரனில் மனிதன் இறங்கிய சாதனையில் முடிந்தது. அதன் பின் பல சாகச ராக்கெட்டுகள் சூரிய குடும்பத்தின் பிற கிரகங்களுக்கும் சூரிய குடும்பத்தைத் தாண்டி அதற்கு அப்பால் வேறு கிரகங்களுக்கும் சென்றுள்ளன.

விண்வெளி என்றால் என்ன?

வெற்றிடத்திற்கு மற்றொரு பெயர்தான் விண்வெளி. ஆனால் இந்த பேரண்டம் என்ற வெற்றிடத்தில்தான் கோடானுகோடி விண்மீன்கள் மொய்த்திருக்கும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies), நட்சத்திங்களைச் சுற்றிவரும் கிரகங்கள், அவற்றின் துணைக் கோள்கள், விண்கற்கள் எ நாம் அறிந்த அனைத்துமே விண்வெளியில் ஒரு சின்னஞ்சிறு புள்ளிதான் என்றால் ஆச்சரியமாய் ருக்கிறதல்லவா!

நம்மைப் பொருத்தவரை விண்வெளி என்பது, பூமியையும் அதைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தையும் தாண்டி பூமியிலிருந்து சுமார் 95 கி.மீ உயரத்திலிருந்து விண்வெளி ஆரம்பமாகிறது எனலாம். ஆனால் அங்கு இதுதான் வளிமண்டலத்தின் எல்லை என்று எதுவும் கிடையாது. காற்றழுத்தம் குறைந்து குறைந்து காற்றே இல்லை என்று ஆன இடம்தான் விண்வெளியின் ஆரம்பம்.

தத்தமது சுற்றுப்பாதையில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆகர்ஷண சக்தியால் இந்த இயக்கம் நடைபெறுகிறது. சூரியனின் இந்த ஈர்ப்பு விசைக்குட்பட்ட விண் வெளிப்பகுதியை நாம் கிரகங்களுக்கிடையிலான விண்வெளி (Interplanetary space) என்கிறோம்.

இதே போன்று நட்சத்திரங்களுக்கு டையிலான விண்வெளியை நட்சத்திர விண்வெளி (Interstellar space) என்கிறோம். இந்த பெரும் தூரத்தைக் கணக்கிட கி.மீ கணக்கு பொருந்தாது என்பதால் ஒளியின் வேகமான விநாடிக்கு 2,99,792 கி. மீ வீதம் அது ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு கணக்கிடு கிறோம். தையே நாம் ஒளியாண்டு என்கிறோம். ஒரு ஓளி ஆண்டு சுமார் 9.46 ட்ரில்லியன் கி.மீ க்குச் சமம். (ட்ரில்லின் என்பது பத்து லட்சம் கோடி. (10,00,00,00,00,000). உதாரணமாக சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிராக்ஸிமா செஞ்சூரி 4.3 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத விண்வெளியின் இந்த தூரங்களைக் கடக்க நாம் கண்டுபிடித்த வாகனம்தான் விண்கலம் என்பதாகும். பூமியின் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்கலத்தை நாம் விண்வெளியில் செலுத்துவதற்கு அதீதசக்தி தேவைப்படுவதால், ராக்கெட்டுகள் இதற்கு உதவுகின்றன.

அமெரிக்கா ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் விண்வெளிக்கு பல ராக்கெட்டுகள் அனுப்பியுள்ளன. சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் சந்திராயன் என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அது அனுப்பிய தகவல்கள் நமக்கு நம்பிக்கையை ளித்துள்ளன. இது பற்றி அமெரிக்காவின் NASA மேற்கொண்டு ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ந்து வருகிறது.

ராக்கெட், ஏவுகணை போன்ற சொற்களால் நாம் குறிப்பிடுவது ஒரு சாதாரண எஞ்சினைத்தான். இந்த எஞ்சின், மற்ற எஞ்சின் களிலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது. அதே அளவிலான ஒரு கார் எஞ்சினைவிட ராக்கெட் எஞ்சின் 3000 மடங்கு அதிக சக்தியை அளிக்க வல்லது. ஒரு ரயில் எஞ்சினை விட 1000 மடங்கு பலமிக்கது. தற்போது ராக்கெட் என்ற சொல் இந்த வகை எஞ்சின்களைக் கொண்டு விண்ணிற்கு ஏவப்படும் விண்கலத் தையும் சேர்த்தே இச்சொல் குறிக்கின்றது.

உயர அளவுகளில் வித்தியாசம் கொண்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட ராக்கெட்டுகள், தற்போது உருவாக்கப்படுகின்றன. 60 செ.மீ அளவிலான பட்டாசு ரக வெடிகூட ராக்கெட் என்றே அழைக்கப்படுகின்றது. பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் 15மீ முதல் 30மீ நீளம் கொண்ட ஏவுகணைகளும் ராக்கெட் வகையைத்தான் சேரும். இவற்றை விட அதிக சக்தியுடன் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களையும் (satellite), விண்கலத்தையும் சுமந்து செல்லும் விண்ணூர்திகளும் ராக்கெட் என்றுதான் அழைக்க படுகின்றது. 1969-70களில் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற சனீஸ்வர விண்கலம்-5என்பதுதான் மனிதன் உருவாக்கிய விண்கலங்களில் மிகப் பெரியது. இது 110 மீட்டர் உயரம் கொண்டது.

ராக்கெட்டுகள் வினாடி நேரத்துக்குள் அளவற்ற சக்தியை உருவாக்குக்கின்றது. அது எரிபொருளைக் கபளீகரம் செய்யும் வேகம் அதைவிட ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. இதனால்தான் குறைந்த தூரமே கடக்க வேண்டுமென்றாலும், அந்த குறைந்த நேரத்திற்கும் ராக்கெட்டுகளுக்கு அதிக எரிபொருள் தேவைப் படுகின்றது.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அதை விட அதியம் சனீஸ் வர ராக்கெட்- 5 விண்ணில் ஏவப்பட்டபோது அது தரையிலிருந்து கிளம்ப 2,120,000 லிட்டர் எரிபொருளை 2 நிமிடம் 45 வினாடிகளில் கபளீகரம் செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதனால் ரக்கெட் எஞ்சின்களின் வெப்பம் சிலசமயம் 33000 C என்ற உச்ச நிலைக்குக் கூடச் செல்வதுண்டு. இது எஃகின் இரண்டு மடங்கு உருகு நிலைக்குச் சமமானது.

அப்பல்லோ-11 சந்திரனுக்கு புறப்பட்ட காட்சி

பயணம் தொடரும்...