
பிரபஞ்சம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'Big Bang' எனப்படும் பெரும் பிரளயத்துக்குப் பின் உருவானது. அக்கணத்தில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவி குளிரத் தொடங்கியதும், முதலில் அணுக்கருவின் நுண் துகள்கள் உருவாகின. பின்பு அணுவின் உட்கருவாகிய நியூட்ரான் புரோட்டான் உருவாகி அதன் பின்னரே எலெக்ட்ரான்கள் தோன்றின.
அணுக்கரு இணைவு, வெப்பம் குளிர்தல் ஆகிய காரணங்களால் விண்மீன்கள் உருவாகின. 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் விண்மீன்களில் ஒன்றான நம் சூரியன் தோன்றியது.
மேற்கூறிய 'பெரும் பிரளயம்' கோட்பாட்டின் அடிப்படையில் ஜெனிவாவில் LHC (Large Hadron Collidar) மூலம் செயற்கைப் பிரளயம் ஒன்றை உருவாக்கி முதன் முதலில் தோன்றிய துகளின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.
இதுவே கடவுள் துகளாக (Higgs boson particle) இருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதைப் பற்றி எனது முந்தய இடுகையில் கூறப்பட்டுள்ளது. இதுவே அணுக்களுக்கு மிக முக்கியமான பொருள் திணிவை (mass) அளிப்பதுமாகும்.
பிரபஞ்சத்தின் கிரகங்கள், நட்சத்திரங்கள், கரும்புள்ளிகள் (black holes) ஆகிய அனைத்திற்கும் அடிப்படை அலகு (unit) இக்கடவுள் துகளே.
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலைப் படியுங்கள்,
இப்பிரபஞ்ச ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
இராயபேட்டை, சென்னை -600 014.
போன் : 044 - 28482441 / 28482973
மின்னஞ்சல்: pavai123@yahoo.com
Sunday, September 28, 2008
செயற்கைப் பிரளயம்
எழுதியது: அறிவியல் நம்பி at Sunday, September 28, 2008
Labels: கடவுள் துகள்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment