Sunday, January 6, 2008

வாசகர்களின் பார்வையில் "கனவுக் கிராமம்"...

திரு.அ.ஜேம்ஸ் வில்லியம்ஸ், தலைவர், மதுரை காமராஜ் – மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (MUTA)

கனவுக் கிராமம் திரு.அறிவியல் நம்பி அவர்களின் கன்னி முயற்சி…

ஆனால் அதன் சுவடுகள் எங்கும் தெரியவில்லை…

ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை அற்புதமாக நகர்த்துகிறார்… தன் எளிய நடையில் ஆங்காங்கே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச் சாதரண வாசகர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறார்…

இங்கிலாந்துக்குச் செல்லாமலேயே அங்குள்ள பல நகரங்களின் மூளை முடுக்குகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்…

தமிழ் இலக்கியத்தோடு மட்டுமின்றி ஐரோப்பிய இலக்கியத்தோடுகூட தனக்கிருக்கும் பரிட்சயத்தைக் காட்டுகிறார்…

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “கனவுக் கிராமம்” சுவாரஸ்யமான ஒரு நாவல் மட்டுமல்லாமல் ஒரு அறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது…

ஏப்ரல் 1999 அமுத சுரபி மாத இதழில், பத்மா சமரசம் அவர்கள்


இந்நூல் ஆங்கில குற்றப் புதினங்களைப் போன்று விறுவிறுப்பாகச் செல்கிறது…

அகதா கிறிஸ்டி, ஆட்லிச்சேஸ், அயன் பிளெமிங் ஆகியோர் தமிழில் எழுதியது போல் இப்புதினம் உள்ளது…

குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் தமிழ் பேசி மோகனாக உலா வருவது போல் உள்ளது...

இது தமிழில் மூல நூல் எனும்போது பெருமையாக உள்ளது…

நூல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் :

1) BOOKS FOR EVER
2) BOOKS FOR THE HOUR
3) BOOKS FOR NEVER

இதில் "கனவுக் கிராமம்" முதல் வகையைச் சார்ந்தது…

பிப்ரவரி 1999 மாணவர் சக்தி மாத இதழ் - புத்தக விமர்சனம்


கனவுக் கிராமம் – சமுதாயக்கதை என்ற எண்ணத்தை தலைப்பு ஏற்படுத்தலாம்…முகப்பு அட்டை கம்ப்யூட்டர் கதையோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தலாம்...ஆனால் கதையோ விறுவிறுப்பான ஜேம்ஸ் பாண்ட் நாவலாக உள்ளது…


படிக்க கையில் எடுத்தால் கீழே வைக்கத்தோனாத அளவிற்கு விறுவிறுப்பான நடை கையாளப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது…

பிரிட்டன் பற்றியும் காமன்வெல்த் நாடுகள் குறித்தும் இந்நாவலில் விவரிக்கப்பட்ட விதம் அந்நகரங்களை நேரில் பார்த்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன…

இந்நாவலில் கதாநாயகன் கையாளும் விஞ்ஞான புதுமைகள் கைகூடும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லை…

ஆகஸ்ட் 1998 – மங்கையர் மலர் – புக் ஷெல்ப் பகுதி


அறிவியலோடு இணைந்த சுவாரஸ்யமான நவீன நாவல்...

புதுமையான விஷயங்கள் படிக்க விரும்புகிறவர்களுக்கு சுவாரஸ்யம்…

S.S. போத்தையா, என்னுடைய பள்ளி ஆசிரியரின் விமர்சானக் கடிதம், 16.06.1998

"கனவுக் கிராமம்" – ஒரு துப்பறியும் நாவலாக இருந்தாலும், ஆபாசம், வன்முறை இல்லாமல், பக்கத்திற்கு பக்கம் அறிவியல், வரலாறு, புவி இயல், இலக்கியம் பற்றிய விஷயங்களை ஏற்ற வகையில் கதை போக்குடன் இணைந்து சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாது…

கி.ராஜ நாராயணின் பாஷையில் சொல்வதென்றால், "நீ தமிழுக்கு கிடைத்த ஒரு வசமான கை !"...

No comments: